search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவர்கள்"

    • அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
    • இந்த மாதத்தில் இதுவரை நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவரும்.

    இந்த மாதத்தில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியுட்டுள் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    துரதிருஷ்டவமாக ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வன்முறை போன்ற செயல்களால் கொலை நடந்திருக்குமா? என்று சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த வார தொடக்கத்தில் கடந்த திங்கட்கிழமை பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

    ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார்.

    இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார். 18 வயதான அகுல் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்கலைக்கழக போலீஸ் துறையின் கவனக்குறைவுதான் அகுல் தவானுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

    • இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    • இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார் கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 சதவீதம் கட்ட ணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.

    • கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
    • மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    புதுடெல்லி :

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

    முதலில் இது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னால்தான் தெரிய வந்தது.

    இந்த போலி சேர்க்கை கடிதங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான நோட்டீசுகளும் வழங்கப்பட்டன.

    தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த மாணவர்கள் அங்கே வீதியில் இறங்கி போராடினார்கள்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சினையை எடுத்துச்சென்றார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு), கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தபோது இந்த விவகாரத்தை அந்த நாட்டின் அரசிடம் எழுப்பினார். இது தொடர்பாக டொராண்டாவில் உள்ள இந்திய தூதரகமும், பிரச்சினைக்குள்ளான இந்திய மாணவர்களைச் சந்தித்தது.

    இந்த பிரச்சினையில் தவறு மாணவர்கள் பக்கம் இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது. கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

    அதைத் தொடர்ந்து கனடா குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர், கனடாவில் நிச்சயமற்ற தன்மையை சந்தித்து வருகிற சர்வதேச மாணவர்களின் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது என தெரிவித்தார். மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், கனடா அரசு மனிதநேய அணுகுமுறையை பின்பற்றியதற்கு காரணம், இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்ஙசிகள்தான். இதை வரவேற்கிறோம்" என தெரிவித்தன.

    • ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்று 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.
    • மாணவர்கள் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஒஜார்க்ஸ் என்ற இடத்தில் வார இறுதி நாளில் திருவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களில் ஒருவர் ஏரியில் குதித்து நீச்சல் அடித்துள்ளார். நீரின் ஆழத்திற்கு சென்ற அவர் அதன்பின் மேலே வரவே இல்லை. இதனால் உடன் சென்ற அவரது நண்பர் பதற்றமடைந்து, நண்பரை காப்பாற்ற எண்ணி, அவரும் நீருக்குள் குதித்து அவரை தேடினார். இந்த சம்பவத்தில் இருவரும் நீருக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும் அமெரிக்காவில் உள்ள மாகாண பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர் என மிசோரி மாகாண போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் உத்தெஜ் குந்தா (24), சிவா கெல்லிகாரி (25) என அடையாளம் காணப்பட்டனர். இதனால் அவர்களது உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, தெலுங்கானா மந்திரி கே.டி.ராமராவ் கூறுகையில், இந்திய மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளும்படி எனது குழுவினரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.

    விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரிட்டன் வரும் இந்திய மாணவர்களுக்கு விசா நடைமுறையை எளிதாக்க வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தியுள்ளார். #UK #India
    லண்டன்:

    பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவர்கள் ஆங்கில புலமை பெற்றிருக்க வேண்டும். பிரிட்டனில் வாழ்வதற்கான பொருளாதார வசதி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றுக்கு தகுந்த சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனினும் பிரிட்டனின் நட்பு நாடுகள் பட்டியலில் உள்ள பல நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு மேற்கண்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், அந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எளிதாக விசா கிடைக்கும்.

    நட்புநாடுகளின் பட்டியலில் சீனா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மெக்சிகோ, பக்ரைன், செர்பியா, டொமினிகன் குடியரசு, குவைத், மாலத்தீவு, மெக்காவ் ஆகிய நாடுகளை பிரிட்டன் அரசு சமீபத்தில் பட்டியலில் புதிதாக இணைத்தது.

    எனினும், தூதரக ரீதியில் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக உள்ள இந்தியா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது பிரிட்டனில் உயர்கல்வி படிக்கும் ஆசையில் இருந்த இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில், லண்டன் மேயராக உள்ள சாதிக் கான் பிரிட்டன் உள்துறை மந்திரி சஜித் ஜாவீத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய மாணவர்கள் நலன் கருதி இந்த பரிந்துரையை செய்த லண்டன் மேயர் சாதிக் கானும், பரிந்துரையை அமல்படுத்த வேண்டிய உள்துறை மந்திரி சஜித் ஜாவீத்தும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×